என் கண்ணின் கருமணி,
என் இதயத்தின் துடிப்பு,
என் உயிர் நாடி,
எனக்கு பதவி உயர்வு அளித்தவள்,
வாழ்க்கையின் எதார்த்தத்தை கற்று தந்தவள்,
வாழ்கையை செம்மை படுத்தியவள்,
நான் உதிர்த்த, உதிர்க்கும் கண்ணீரை தன் பிஞ்சு விரல்களால் அன்றும், கனிவான இதயத்தால் இன்றும், தேற்றுபவள்,
என்னை தன் குழந்தையாக ஒரு நிமிடமும், தாயாக மறு நிமிடமும் பார்க்கும் திறன் உள்ளவள்,
என்னை முற்றிலும் அறிந்தவள், என் பலங்களையும் பலவீனங்களையும், அறிந்து, ஆராய்ந்து விஷயங்களை பகிர்பவள்,
என் செவிலித்தாயாக ஆறு மாத காலம் என்னை பாதுகாத்தவள்,
எனக்கு வலி தெரியாமல் இருக்க என் நெற்றி வருடி என்னை தூங்க வைத்தவள்,
என் கை பக்குவத்தின் முதல் விசிறி !!!
என்னை போலவே சிந்திப்பவள், ( ஆனால் என்னை விட தெளிவாக சிந்திப்பவள்),
என் ஆசிரியை, என் தோழி, என் நலன் விரும்பி, என் விசிறி,
என் எல்லாம் …….
என் மகள்,
நான் வணங்கும் என் செஞ்சுலட்சுமி தாயாரின் பிரதிநிதி…..
Unmai than.thaaikku pin magalgal than thaai.pen kulanthaikal kidaipathuvae oru varam
LikeLike