இன்று ஒரு மைல் கல் ……….

இன்று ஒரு மைல் கல்…
பல காலங்கள் கழித்து திரும்பிப்பார்க்கும்போது, உன்னை நினைத்து நீயே பெருமை படும் நாளாக இன்றைய நாள் அமையும்.
நான் எப்பொழுதும் கூறும் வார்த்தையை/தைரியம் ஊட்டும் வாக்கியத்தை கூறினேன், ஏனோ உன் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது.
அனால் அது நான் எதிர்ப்பார்த்ததுதான்…..அதனால், என்னை திடமாக வைத்துக்கொண்டு, உன்னை தேற்றினேன் …..(மற்றும் ஒரு முறை ).
உன் மன உளைச்சல் எனக்கு புரிகிறது உணர முடிகிறது…..
உன் பெயருக்கு பின்னால் நீ சேர்த்துக்கொள்ள போகும் பட்டங்கள் நாளை உன்னை பிரதிபலிக்கும், உன் நிறமோ, உன் கூந்தலோ, உன் பல் வரிசையோ, உன் உடல் பருமனோ, உன் உயரமோ அல்ல……..
மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது …….
உன் அன்பு ததும்பும் முகமும், சிரிப்பும், அடுத்தவர் வலி உணரும் குணமும் நீ எடுத்துக்கொண்டுள்ள துறைக்கு மிக முக்கியம்.
தைரியமாக எதிர்கொள் வாழ்க்கையை…….
நான் எப்பொழுதும் கூறுவது போல், யார் எவ்வளவு, தைரியம் கூறினாலும், அதை செயல்படுத்துவது உன் கையில் தான் இருக்கிறது….
பேசுகிறவர்கள் பேசிக்கொண்டே தான் இருப்பார்கள்….. எப்பிடி இருந்தாலும் பேசும் இந்த உலகம்….
உன்னை மட்டும் தான் விமர்சிக்கிறார்கள் என்று நினைக்காதே…..
மற்றவர்களின் குறு குறு பார்வை நமக்கு பழகிவிட்டது இப்போது…. (நமக்கு என்று தான் சொல்வேன் ……..அந்த வலியை நானும் ஒவ்வொரு முறையும் அனுபவித்ததனால்)
என் ஜாண் உடம்பிற்கு வயிறே பிரதானம் என்பார்கள்…
அவரவரின் நலன் விரும்பியாக நீ பரிந்துரைக்கப்போகும் சத்தான உணவு, அவர்களை மிக விரைவில், நோய்லிரிந்து, நலம் பெறச் செய்து உன்னை வாழ்த்தச் செய்யும் ……..
உன் குடும்பம், உன் நலன் விரும்பிகள்,உன் தோழிகள், அவர்கள் உனக்கு உன் கை தொலை பேசியில் அனுப்பிய வாழ்த்துக்கள், உனக்காக செய்யும் பிரார்த்தனைகள், இவையெல்லாம் வீண் போகாது…..
இவை எல்லாவற்றிற்கும் மேலாக கடவுள் இருக்கிறான்,
நம்மை காப்பதை அவனிடம் விட்டபிறகு நமக்கு என்ன வீண் கவலை?

6 responses to “இன்று ஒரு மைல் கல் ……….

  1. There could have no better Admiration, encouragement , promise and pride. U r a special mother and the girls could have not had anybody better. Life is all about hope, love and care and I believe hope should always rule the rest even fear and failures. Life is beautiful in all its colours even with the grey !! My love to kids and Admiration and salutations to u dear.

    Like

  2. reading becomes so valuable when the writer writes it from the bottom of his or her heart. the genuinity and the real feel makes it very great. u are very lucky to have the capacity to put your feelings into words.keep writing. i m enjoying.

    Like

  3. daily unnodu oru article padikalai enna emptyya iruuku ida yarukkaga ezudinai endralum enekkagave ezudhina madiri irukku aval parinduraikum sattana unavai sappitta piragavadu en weight kurainum i am weighting for her to come to cbe

    Like

பின்னூட்டமொன்றை இடுக