மூட் நம்மை முடக்கக்கூடாது ..

sorrow faceஎவ்வளவு படித்தாலும், கேட்டாலும், உணர்ந்தாலும், கடைபிடிக்க முயற்சித்தாலும், நடு  நடுவே, சந்தர்ப்ப சூழ்நிலைகள் கை கொடுக்காமல் போனால்,

படித்ததும், கேட்டதும், உணர்ந்ததும், கடை பிடிக்க முயன்றதும் நம் கைவிட்டு போகிறது…
நமக்கு வேண்டப்பட்ட ஒருவர், நாம் நன்றாக அறிந்தவர், ஒரு வார்த்தை சொல்லி விட்டால், நாம் ஏன் இவ்வளவு பரிதவித்து போகிறோம்?
உடனே கோபமும், அழுகையும் பொத்துக்கொண்டு வருகிறதே ?
பழசையெல்லாம் கிண்டி கிளறி எடுக்கிறது மனசு
அந்த குப்பயோடேயே வருகிறது, சுய பச்சாதாபம் ….
‘நானாக்கம் இதெல்லாம் தாங்கின்டேன் ” என்று புலம்புகிறது மனசு….
“அதனாலென்ன, இன்று எல்லாம் நன்றாகத்  தானே இருக்கு”  என்று புத்தி ஒரு பக்கம் சமாதானம் கூறினாலும்,
” அதெப்படி, அப்பிடி ஒரு வார்த்தை என்னை பார்த்து சொல்லி விட்டார்கள் ” என்று திரும்ப திரும்ப வேதனையை பறைசாற்றுவதற்கு அங்கீகாரம் தேடுகிறது மனசு….
ஒரு நாள் முழுவதும் மூஞ்சி பரண் மேல் ஏறி உட்கார்ந்து கொள்கிறது.
எதிலும் ஈடுபட மறுக்கிறது
வருத்தப்படுவதையும், மூஞ்சி அறுந்து தொங்குவதையும் நியாயப்படுத்த தேடுகிறது மனசு….( அதில் ஒரு தனீ  சுகம் அந்த வேளையில் )
உண்டா இல்லையா ? மறைக்காமல் சொல்லுங்கள் !!!!!
வாய் விட்டு அழுதாலும், நண்பர்களை அழைத்து தொலை பேசியில் புலம்பித்  தீர்த்தாலும் அடங்குவதில்லை…
இப்போதெல்லாம் முகநூலில் ( facebook ) ஸ்டேடஸ் அப்டேட் (status update ) செய்தால் கூட தணிவதில்லை !!!!!
அதற்க்கான நேரம் குறைந்தது ( நம் பிடியில் விஷயம் இருந்தால் ) 24 மணி நேரம்…..
புயல் சின்ன அறிகுறி போல் …………..
சூறாவளியாக வீசிவிட்டு மெது மெதுவே சகஜ நிலைக்கு திரும்புகிறது.
நாம் கட்டுக்குள் கொண்டுவராவிட்டால் இன்னும் ஓரிரு தினங்கள் கூட நம்முடன் தங்கிவிட்டு போக தயார்தான்…..
ஆனால் அடித்து விரட்டவிட்டால், ஈஷிக்கொண்டு இருந்துவிடும்
அப்பறம் நாம் முன்னேறுவது எங்கிருந்து ???

2 responses to “மூட் நம்மை முடக்கக்கூடாது ..

  1. சுய பச்சாதம் இது அனு!
    உடனே விரட்டவிட்டால் நம்மை அணு அணுவாக அரித்து விடும்!
    யாருமே மகான் அல்ல!

    Like

  2. சுயபச்சாதாபம் என்று இருக்க வேண்டும்.

    Like

பின்னூட்டமொன்றை இடுக