Tag Archives: உடை

காதலின் தீபம் ஒன்று….

காதலின் தீபம் ஒன்று

ஏற்றினாளே என் நெஞ்சில்

ஊடலில் வந்த சொந்தம்

கூடலில் கண்ட இன்பம்

மயக்கமென்ன… காதல் வாழ்க !!!!

பஞ்சு அருணாசலம் எழுதி, இசை ஞானி மெட்டு போட, எஸ்.பி.பி தன் குரலால் என்னை /நம்மை இன்று வரை கிறங்கடிக்க, மிகை இல்லாத body language இல் ரஜினிகாந்த். தம்பிக்கு எந்த ஊரு படத்தில் இந்த காட்சி. பாடலின் தொடக்கம் சுமதி என்று மரத்தில் பொறிக்கப் பட்டிருக்கும் பெயருக்கு முத்தமிடுவது போல் துடங்கும். (1984 இல் வந்த படம். இன்று போல் கதாநாயகிகளை/ கதாநாயகன்களை கடித்து துப்புவதெல்லாம் அப்போது இல்லை என சொல்லலாம்).

அந்த பாடல் முழுவதுமே, பான்ட் பாக்கெட்டில் தன் கைகளை வீட்டுக்கு கொண்டு, இங்கும் அங்கும் நடந்து நடந்து பாடியிருப்பார் ரஜினி. மாதவியும் நிறைய யோசனையில் ஆழ்ந்து இருப்பார்.

ஒன்று தான் எண்ணம் என்றால்

உறவு தான் ராகமே…

அப்பிடி ஒரு காதல் இன்று பார்க்க முடியுமா ?

என்னை நான் தேடித் தேடி…உன்னிடம் கண்டுகொண்டேன்….

அடாடா… சூப்பர் வரிகள்…… ஆனால் இன்று…

அது சரி உனக்கென்ன வந்தது இன்று என்று நீங்கள் கேட்பதில் தவறில்லை. ஏங்க சுத்தி முத்தி எங்க பாத்தாலும் சிவப்பு கலர்… ஹார்ட்டு…. ரெட்டை மோதிரம்…சிவப்பு ரோஜா… அப்பறம் ஏங்க நா அதை பத்தி பேச மாட்டேன்.

ஆனா இதுக்கெல்லாம் முக்கியமான காரணம் இன்று காலை நடை பயிற்சிக்கு நான் போன போது கண்டு தொலைத்த கண் கொள்ளா காட்சிதாங்க….

பயிற்சியின் நடுவே 15 நிமிட தியானம் செய்வது வழக்கம்.

இன்றும் உட்கார்ந்தேன்…பக்கத்து பெஞ்சில் 3 யுவதிகள். அந்த காலை பொழுதிலும், நன்றாக ஒப்பனை செய்து கொண்டு, பளிச் பளிச்…..நடுவில் இருந்த பெண் மட்டும் முகம் காட்டாமல், வலது புறம் இருந்த பெண்ணின் தோள் மீது சாய்ந்திருந்தாள். அவளும் இவள் கன்னம் தட்டி சமாதான படுத்திக் கொண்திருந்தாள். சரி நம் வேலையை பாப்போம் என கார்டு எடுத்து காதில் சொருகி, தியான app ஐ தேடி, அதை ஆரம்பித்தேன்.

இதமான பெண் குரல்,சல சலக்கும் நீரோடையின் ஒலியுடன், பயிற்சியாளர் பெண்மணி எனக்கு, ஆணைகள் பிறப்பித்தாள்… மூக்கு வழியாக மூச்சை இழுத்து, வாய் வழியாக சில முறை விட்ட பின்பு, இதயத்தை தொட்டுக் கொண்டு, அதற்கு நன்றி சொல்ல சொன்னாள். அரை நூற்றாண்டாக அடித்துக் கொண்டிருக்கிறாய், யப்பா சாமி, நல்ல படியாக தொடர்ந்து அடி, இப்போதைக்கு நின்னு கின்னு தொலைக்காதே என்று செல்லமாக சொல்லிவிட்டு..பெண் பயிற்சியாளர் சொன்னது போல், சுய மேம்பாட்டு வரிகள்….

ஐ ஆம் ஹாப்பி

ஐ ஆம் ஹெலத்தி

ஐ ஆம் அட் பீஸ்…

எங்கத்த பீஸ்… பக்கத்தில் விசும்பல் சத்தம். நம்ம நடு நாயக பொண்ணு தாங்க. கண்ணை திறக்க கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு, உலா போன எண்ண ஓட்டங்களை, லகான் போட்டு, கட்டி இழுத்து வந்து மீண்டும்,

ஐ ஆம் ஹாப்பி…என்று ஆரம்பித்தால், சள சள என பேச்சு குரல். சரி இன்னக்கி தியானம் அம்பேல் என்று தெரிந்ததும், கண்ணை திறந்து பக்கத்தில் பார்த்தேன். அப்பிடியே தலை முடியில் பாத்தி கட்டி விட்டாற்போல ஒரு வெட்டு, அதுக்கு ஒரு கலர், (நான் சின்னவளாக இருக்கும்போது எண்ணெய் தடவ வழியில்லாமல் இருப்பவர்கள் தலை இப்படி தான் இருக்கும்… அது அப்போ ‘செம்பட்டை’ இப்போ ஹேர் கலரிங்). ஒரு விடலை… அழும் அந்த பெண்ணை சமாதான படுத்த கையை பிடித்து எழுப்பவதும், முகத்தை பார்க்க முற்படுவதுமாக. ஒரு வழியாக நம்ம ஹீரோயின் மனமிரங்கி கையை எடுத்து விட்டு தன் இருப்பிடம் விட்டு ஏழுந்தாள்.

யப்பே….சிவப்பு லிப்ஸ்டிக்… நன்றாக வெள்ளை பூச்சு முகத்தில்…

அட கொடுமையே… என்னவோ ரொம்ப வருத்தத்தில் இருக்கிறாள் என்று நினைத்ததெல்லாம், வீணானதே…

சும்மாவா…. அட பன்னி… அழுது என் தியானத்தை வேறு கலைத்தாயே…

அவன் கை கோர்த்துக்கொண்டு இன்னும் ரெண்டு பெஞ்சு தள்ளி போய் உட்கார்ந்தாள். கருமம்… ஒரு நீண்ட பெரு மூச்சு விட்டுவிட்டு இடத்தை காலி செய்தேன்.

காதல் மேல் எனக்கு வெறுப்பு இல்லை. இந்த வயதுக்கு வராத காதல்(அது காதல் தானா???) எரிச்சல் ஊட்டுகிறது. படிக்கும் பருவத்தில், ஏன் நல்ல நண்பர்களாக இருக்க கூடாது. நன்றாக படித்து, வேலையில் அமர்ந்து, சம்பாதித்து, தானும் பெருமை அடைந்து, பெற்றவர்களையும் பெருமை அடைய செய்து, எவ்வளவு இருக்கிறது…வெட்டி பொழுது போக்கும் இந்த விடலைகளை பார்த்தால் பத்திக் கொண்டு வருகிறது.

சமீபத்தில்தான் ‘ஊரி’ என்ற இந்திய ராணுவம் தொடர்பான படம் பார்த்தேன். இந்த செம்பட்டய கொண்டு மிலிடரயில் விட்டு விட வேண்டும். விடய காலையில் ஒரு பெண்ணிற்காக எழுந்து வந்தவனுக்கு, காலையில் மிலிட்டரி பள்ளியில் எழுந்து கிரௌண்டை சுத்தி ஓடுவது ஈஸி தானே…

பொறுப்பு என்ற ஒன்று இல்லை. இதில் ஆண் பெண் பேதமும் இல்லை.

சினிமாவில் காட்டுவது இல்லை வாழ்க்கை. ஏகப்பட்ட போராட்டங்கள் நிறைந்தது. பொறுப்புகள் கொண்டது. ஆணும் பெண்ணும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒரு தூண் போல நின்று, வாழ்க்கையை கொண்டு போக வேண்டியது. அந்த காதலில், பாசம், பரிவு, தியாகம், கோவம்,ஊடல்,கூடல்,தேடல், விட்டுக்கொடுத்தல், கண் முடித் தனமாக சப்பை கட்டுதல் இன்னும் இன்னும் எவ்வளவோ…

அந்த பொறுப்பற்ற ஜோடிகளை பார்த்த நொடியில் தோன்றியது தான் இந்த தலைப்பு.

எவ்வளவோ பாடல்கள் இருக்கும்போது ஏன் இந்த பாடல்… தெரியவில்லை. ஏளனமாக ஆக தான் இந்த தலைப்பை கொடுத்தேன்.

ஆனால் நல்ல காதல் வாழ்க.

காதலர் தின நல் வாழ்த்துக்கள்….

பருப்பு சாம்பாரும் ப்ரஸ்ஸல் ஸ்பரௌட்சும்…..

IMG_1963.jpgஅடடா என்ன காம்பினேஷன் மா ….

இத இத…இத தான் நான் எதிர்பாத்தேன்…

காப்பிக்கு மட்டுமில்லாமல்,

பொங்கல் வடை சாம்பார், அடை அவியல், ஆப்பம் குருமா, சப்பாத்தி குருமா, அதோட ஒரு நல்ல சூடான பில்டர் காபி…(கொஞ்சம் இடைவெளி விட்டு)…ஸ்ட்ராங்கா…

சாம்பார் பொரியல், ரசம் வதக்கல்,கூட்டு கறி, தொகையல் சுட்ட அப்பளம், வெத்த கொழம்பு-சுட்ட அப்பளம் உருளைக்கிழங்கு ரோஸ்ட், மோர் கொழம்பு பருப்பு உசிலி என்று அடிக்கிக்கொண்டே போகலாம்.

சாப்பாட்டில் மட்டுமா அனு…

இந்த ms ப்ளூ ல ரெட் பார்டர் இருக்கே…எவேர் கிரீன் காம்பினேஷன் !

மாம்பழத்துல பச்சை …சான்சே இல்லை

மயில் கழுத்துல அரக்கு

நல்ல கருத்த பச்சைல மஸ்டர்டு பார்டர் இருக்கும் பாரு….

இப்படி முடியவே முடியாத கலர் காம்பினேஷன்கள்….

(இதனால் தான் ஆண்களுக்கு துணி எடுக்க போகும் போது நமக்கு கழுத்து வரை துக்கமோ)ஆனாலும் அவர்கள் ரொம்ப பாவம் தான்.

சரி காம்பினேஷன் இங்கே நின்று விடுகிறதா என்றால் இல்லை…

இந்த மாங்கா மாலை ல இப்பிடீ…ஒரு ரோ முத்து இருந்தா அழகா இருந்திருக்கும்.

இந்த சேப்பு கல்லுக்கு பதில் பச்சை கல் அமக்களமாக இருக்கும்.

சில …சில சமயத்தில் பெண்கள் பெருந்தன்மையுடன் உள்ளதை உள்ள படி ரசிக்கவும் செய்வார்கள்.

இந்த அன்கட் டைமண்ட் தான்ங்க என் பிரென்ட் கீதா வாங்கினா…

இந்த குட்டி ஜிமிக்கி…..

(ஆபரணங்கள் பற்றி பேசும்போது ஜிமிக்கி பற்றி பேசவில்லை என்றால் என் ஜாதகப்படி கால ஜிமிக்கி தோஷம் வருமாம்)!!!!

காதோட ஒட்டினாபோல எவ்ளோ க்யூட்டா இருக்கு பாருங்களேன்…வைர தோடுக்கு போட்டுக்க பெரிய ஜிமிக்கி இருக்கு …இது தினப்படி போட்டுக்க நல்லாருக்குமா னு பாக்றேன்…

ஆனால் இப்போதெல்லாம் தங்கத்தில் பணம் செலவு செய்வது வேண்டவே வேண்டாம்

சில மாதங்கள் முன் நகை கடையில் நுழைந்தால் ஏதோ இன்ஸ்டாகிறாமில் பக்கங்கள் புரட்டுவது போல் ஒரு அனுபவம். எல்லாமே தங்கம் அல்லாத உலகத்தில் கிடைப்பதால் மலைப்பாக இல்லை. டெம்பிள் ஜுவெல்லரி என்று நிஜ கெம்ப் தோற்கும் அளவுக்கு டிசைன் களும், கற்களும் வந்து விட்டன .

அதையும் தாண்டி ஒரு கல்யாண விழாவிற்கு சென்றால், பக்கத்தில் உள்ளவர், அங்கே ஒரு perfect காம்பினேஷன் பற்றி அங்கலாய்ப்பார். பிள்ளை… கொஞ்சம் நிறம் கம்மி தான் பொண்ண பாகர்ச்ச…என்றும்… பொண்ணு கொஞ்சம் குண்டு ..பிள்ளை சின்னவனா தெரியறான் இல்ல… என்று ஒரே பேத்தலாக பேத்துபவர்கள்…

(பிள்ளை வீட்டார் / பெண் வீட்டார் காதில் விழுந்தால் அந்த நபர் அம்பேல்)

காலை டிபன், சாப்பாடு, புடவை, வேட்டி சட்டை, நகை, பாத்திரம் எதில் வேண்டுமானாலும் காம்பினேஷன் தேடுங்கள் ஆனால் உங்கள் மனைவியோ கணவனோ ஏற்கனவே உங்களுக்கு நிச்சயிக்க பட்டவர்கள். இடையில் புகுந்து பெரிய்ய்ய்ய் பருப்பாட்டம் எதுவும் செய்யாதீர்கள்.

அதற்காக உங்கள் இஷ்டமில்லாமல் தலையில் திணிக்க பட்டதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை.

ஏற்படுகிற காம்பினேஷனை முடிந்த மட்டும் நன்றாக கொண்டு போக முற்படலாமே.

If you get married , you stay married

என்று எங்கோ படித்தது நினைவிற்கு வருகிறது. முணுக் முணுக்கென்று எதற்கு எடுத்தாலும் பேச்சுக்கு பேச்சுக்கு வாதிடுவது, சண்டை போடுவது, மூஞ்சியை தூக்கி வைத்துக் கொள்வது(ஆண் பெண் இருவருக்கும் தான் ) இதெல்லாம் தவிர்த்து, வாழ ஆசை படலாம்.

கிடைத்த காம்பினேஷனை நல்ல காம்பினேஷனாக மாற்றலாம்.

பை தி வே… தலைப்பில் உள்ள காம்பினேஷன் மிக அருமையாக இருந்தது.

அமெரிக்க இந்திய ஜுகல்பந்தி இன்று வ்ந்த வீட்டு சமயலறையில்!!!!!