இன்று காலை கை தொலை பேசியில் ஒரு forward .
தோல்வியை கண்டு அஞ்சாதே… எதிர்த்து போராடு..
மிக அழகாக ஆங்கிலத்தில் …எழுதப்படிருந்தது…
தோல்வியை / இழப்பை கண்டு துவண்டு போவது சகஜம்.
அதிலிருந்து மீண்டுவிடுகிரோம் என்பது நிஜம்….
வெற்றியும் தோல்வியும் மாறி மாறி தான் வரும் என்று
நான் கூறவில்லை
கண்ணபிரானே கூறியுள்ளார்…
அவருக்கென்ன கூறிவிட்டு போய்விட்டார்…
நாங்கள் தானே அனுபவிக்கிறோம் என்று நீங்கள் அங்கலாய்ப்பது காதில் விழுகிறது….
அவர் மற்றொன்றையும் கூறினார்…
வெற்றி தோல்வியை
சமமாக பாவிக்கும்படியும் கூறியுள்ளார்.
அது எடுத்த எடுப்பில் வராது..அவ்வளவு சுலபமும் அல்ல ஆனால்
முடியாதது அல்ல.
சின்ன வீழ்ச்சி வந்தால் அதள பாதாளத்தில் போவதும்
சின்ன வெற்றி கண்டால் வானில் பறப்பதும் வேண்டாமே.
வெற்றியும் …அடுத்த வெற்றி வரை தான்
தோல்வியும் அடுத்த தோல்வி வரை தான்
என் தகுதியில் உள்ள செயலை செய்து விட்டு பலன் / விடை தெரியாமல் காத்திருக்க நான் பழகி விட்டேன்.
விடை தெரியாமல் …விடைக்கு பயந்து அல்ல….
எது எனக்கு எது சரியானதோ அதை இறைவன் நடத்திக்கொடுப்பார் என்ற நம்பிக்கை….
அங்கு தான் இருக்கிறது சூட்சமம்
எனது நம்பிக்கை….
இறைவனின் தீர்ப்புகளில்
என் பக்தியில்
என்னை படைத்தவனுக்கு என்னை பாதுக்காக தெரியும் என்பதில்
இன்று எனக்குள்ள
வாழ்வு …எவ்வளவோ பேருக்கு இல்லை
அதனால் புலம்பல் கூடாது என்பதில்
எவ்வளவு முறை சறுக்கினாலும் இறை அருளால் எழுந்துவிடுவேன் என்பதில்
துக்கம் வருத்தம் ஏமாற்றம் எல்லாமே தற்காலிகம் தான் என்கிற நம்பிக்கையில்
இது ஒரு கெட்ட நாள் ….மட்டுமே கெட்ட வாழ்க்கை இல்லை என்ற எண்ணம் மேலோங்குவதில்
மிக மகிழ்ச்சியான தருணங்களும்
கடந்து விடும் …அதாலால் ஆட்டம் போடக்கூடாது என்ற எனது மனப் பக்குவம் எனக்கே என்னிடம் பிடித்த விஷயம்…
என் பக்தி …அது கொடுக்கும் மன சாந்தி …..
நல்லதே நடக்கும்…
சாதகமமில்லாதது நடந்தாலும் அதிலிருந்து மீண்டு விடலாம் என்ற தைரியம்
இடைவிடாது ஜபிக்கும் கிருஷ்ணா நாமம் ….
எங்கோ படித்த வரிகள் கண்ணபிரான் கூறுவதாக………
சத்திய வாக்கு எனக்கு…..
ஊன்றி எழ உடலுக்கு கை
மனதுக்கோ நான்