பொ(டவ) போச்சே !

வடிவேலு ஒரு படத்தில், ‘வட போச்சே ‘னு சொல்வாரே அது போல தாங்க எனக்கும்
ஒண்ணு நடந்தது.
சும்மா கெடந்த சங்க ஊதி கெடுத்தானாங்க்ர கதையா , நண்பி சாந்தி , இதை
பாருங்கோ buddy னு ஒரு அரை டஜன் பொடவைகளோட போட்டோ வை அனுப்ப , அந்த ஒரு
நொடி சலனத்துக்கு நான் பலியாக , வேற என்ன ஆர்டர் தான். ஒண்ணுக்கு பதிலா
ரெண்டு பிளஸ் மாமியாருக்கு ஒண்ணு . நீங்க வாங்கலையா னு கேட்டா, புண்யவதி,
பக்கத்துக்கு எலைக்கு தான் பா பாயசம் ஊத்த சொன்னேன் எங்கிட்ட ஏற்கனவே
எக்கச்சக்கமா இருக்கு னு சொல்லி எஸ் ஆயிட்டா !

சரி நம்ம பங்குக்கு நம்மளும் பக்கத்துக்கு எலைக்கு பாயசம் ஊத்தலாம் னு
நம்ம பத்மா மாமிய இழுத்து விட்டேன். அவா பார்த்துட்டு எனக்கு
பிடிச்சதெல்லாம் வித்து போச்சு பா னு சொல்லிட்டா . சரி பாக்கலாம் அப்பறமா
ஏதானும் நல்லதா வாங்கிக்கோங்கோ னு சொல்லி சமாதான படுத்த்தினேன்.

சரினு அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில போய் ஆர்டர் பண்ணிட்டு பணத்த
அனுப்பலாம் னு பார்த்தா அந்த பக்கதிலேந்து மெசேஜ் மும்பைக்கு கொரியர்
போறதில்லயாம் மேடம் னு ! ஓ அப்பிடியா னு கொஞ்சம் ஸ்வரம் இறங்கினாலும்
டக்குன்னு பத்மா மாமிய கூப்ட்டு நான் செலக்ட் பண்ணினதுல உங்களுக்கு
பிடிச்சுதே அத நீங்க வாங்கிக்கோங்கோ னு சொல்ல , அப்பப்பா உங்களுக்கு
எவ்ளோ பெரிய மனசு னு ஏகத்துக்கு என்ன புகழ்ந்து தள்ளிட்டா னா பாத்துக்கோங்களேன். நானா இருந்தா ரொம்ப வருத்த பட்டிருப்பேன் னு சொல்லி மாஞ்சு போனா பத்மா மாமி.

என்னடான்னு பாத்தா அதுலேந்து ஒரு புடவைய எனக்கு வாங்கி என் பிறந்தநாளுக்கு பரிசு ! எவ்வளவு சமயோஜிதமான எண்ணம் இல்ல ?

படத்தில் கட்டி கொண்டிருக்கும் புடவை தான் அது. ரவிக்கை துணியோட மஞ்சள் குங்குமம் வளையளோட என் கூட பொறந்த akka இருந்தா எப்பிடி அனுப்புவாளோ அது மாதிரி அனுப்பின பத்மா மாமி

 

ஆனா இதுல என்னனா எனக்கு பெரிசா ஏமாற்றமா இல்ல ! ஏன்னா அது ஒண்ணும் நமக்கு புதுசு இல்லியே ! அதுக்காக எனக்கு வாழ்க்கையே ஏமாற்றம் தான் னு எல்லாம் நா ஒளர போறதில்லை. சின்ன சின்ன ஏமாற்றங்கள் இருந்து கொண்டே தான் இருக்கும். எதிர்பார்ப்புகள் இருக்கற இடத்தில தான் ஏமாற்றங்கள் ஆனா எதிர்பார்ப்பு இல்லாமல் எப்படி வாழறது ? எதிர்பார்ப்பதும் ஏமாறுவதும் கொஞ்ச நாள் ல பழகிடும் .

சரி எதிர்பாக்காமலே இருக்க முடியுமா நா இல்லை னு தான் எனக்கு தோன்றது. எவ்வளவு வயசானாலும் ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருக்கு – நடக்கலை னா ஏமாற்றமும் இருக்கு. சின்ன வயசுல அதோட பாதிப்பு அதிகமா இருக்கு, வயசான கொறையுது.

ரென்டு வருஷம் முன்னாடி buddy ஷாந்தி ய சந்தித்தபோது ஒரு புடவை வெச்சு குடுத்தா.சந்தோஷம் பிடிபடலை ( கூட பொறந்த பொறப்புன்னு ஒண்ணு இல்லாததால இந்த மாதிரி பாசத்தில தொபுக்கடீர் னு வழுக்கி விழுந்திடுவேன். பாசமா அடி படும்போது வலிக்காது. மறுபடியும் இப்போ அப்பிடி ஒரு பாச வழுக்கல். இதே போல நான் எல்லாரோடும் சந்தோஷமா இருக்கணும் னு வேண்டிக்கறேன். ஒரு புடவைக்கு என்ன இவ்வளவு பேச்சு நீங்க கேக்கலாம் .. ஆனா புடவைக்கு பின்னாடி அவர்களுக்கு என் மேல் இருக்கும் அன்பு நிர்மலமானது !

ஷாந்தி அன்பளித்த புடவை

எதை கொண்டு வந்தோம் எதை கொண்டு செல்ல போகிறோம். இருக்கும் காலம் வரை எல்லோரிடமும் அன்பான வார்த்தைகள் பேசுவோம், சின்ன சின்ன செயல்களினால் அன்பைவெளிப்படுத்துவோம், எதுக்கு அனு இந்த விளம்பரம் னு கேட்ட போது, ரத்த சம்பந்தம் இல்லாத ஒருவருடன் அன்பாக இருப்பது எப்பிடி, எதிர்பார்ப்பு இல்லாத (unconditional) அன்பை வெளிப்படுத்துவது எப்பிடி னு மக்களுக்கு சொல்லலாமே னு தான் னு சொன்னேன்.

இந்த ஊரடங்கு வேளையில் வீட்டுக்கு வந்து துணியை வாங்கி கொண்டு போய் ரவிக்கை தைத்து கொடுத்த எங்கள் பிரகாஷ் bhai கும் நன்றிகள் பல .

வாங்க பழகலாம் !!

அன்பை பொழியலாம் !!

 

2 responses to “பொ(டவ) போச்சே !

  1. அருமையான பதிவு! மகாலட்சுமி மாறி இருகேல் பார்க்க!

    Like

பின்னூட்டமொன்றை இடுக