Monthly Archives: மே 2015

மாலை சூடும் மண நாள்

image

மாலை சூடும் மண நாள்
இள மங்கையின் வாழ்வில் திருநாள் ….
இன்று  அன்னாளை 25வது முறையாக கொண்டாடுகிறோம்.
பிறந்த வீட்டில் பெற்றோருடன் வாழ்ந்ததை விட 4 வருடங்கள் கூடுதலாக உன்னுடன் வாழ்ந்துவிட்டேன்

என்ன தவம் செய்தேனோ….
உன்   ஒரு பாதியாய் வாழ்வதற்கு

பெற்றவனையும், சிற்றையனையும் காப்பேன்
என்னுடன் இருப்பாயா என்றாய்…

என்னை பெற்றவர்களுக்கும் ஆண் பிள்ளை இல்லை
அவர்களை பேண நீ என்னுடன் இரு,
நானும் இருக்கிறேன் என்றேன்

image

உன் வாக்கை நீ நிறைவேற்றிவிட்டாய் …
என்ன புண்யம் செய்தார்களோ உன்னை மருமகனாய்  அடைய

நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன் (உன் துணையுடன்)….

image

என் ஆசிகளை மட்டுமே எண்ணிப்  பார்கிறவள் நான்
என் வாழ்வின் ஐந்து ஆசிகள் ….நீயும், என் மகள்களும், அம்மாவும் அப்பாவும்….
ஒரு பதிவில் கூறி விட முடியாது நம் உறவை.
என் மரியதைக்குரியவனே பல தருணங்களில் நீ என் முன் விஸ்வரூபமாய் உயர்ந்திருக்கிறாய்
பல சமயங்களில் உன்  மனதை நானும்
என மனதை நீயும் வேதனை அடைய செய்திருக்கலாம்
ஆனால் அது நல்ல தாம்பத்யத்தின் ஒரு பங்கு

image