அமெரிக்கர்களும் கனடா நாட்டு மக்களும் அவர்களது உழவ மக்களுக்கு சொல்வது. அவர்கள் நாட்டில் அறுவடைக்கு பின் இயற்கைக்கு சொல்லுவது… தங்கள் மேல் இயற்க்கை அன்னை காட்டிய கருணைக்கு நன்றி கூறுவது
அக்டொபேர் மாதத்தின் இரண்டாவது திங்கள் கிழமை கனடாவிலும் , நவம்பர் மாதத்தின் 4வது வியாழக்கிழமை அமெரிக்காவிலும் கொண்டாடப் படுகிறது…
இத தான் நாம பொங்கல் வெச்சு கொண்டாடறமே…..
சிறு வயது முதலே ஒவ்வொரு நாளும் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் போனஸ் என்று உணர்ந்து இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கலாமே….
சாப்பாட்டை வீணாக்காமல் இருப்பது,
தேவை இருக்கிறதோ இல்லையோ பொருள்களை வாங்கி குவிப்பது,
தண்ணீரை வீணாக்குவது,
துணிகளை வாங்கி அடுக்குவது
அது போதாதென்று மனதளவிலும் தெளிவாக இல்லாமல்
பொறாமை
போட்டி
புறம் பேசுவது
ஏசுவது
போன்ற கெட்ட எண்ணங்களை தவிர்த்து என்னை இன்று இந்த நிலையில் வைத்ததற்கு நன்றி என்று நவின்று கொண்டே இருக்கலாம்.
நம்மால் முடிந்த அளவு உறவுகள் விரிசல் விடாமல் பார்த்துக்கொள்ளலாம்
உடைந்து விட்ட உறவுகளை முடிந்தால் சரி செய்யலாம், இல்லையென்றால் விலகி இருக்கலாம்
அதற்க்கு எனக்கு நல்ல புத்தி கொடுத்தாயே இறைவா என்று நன்றி கூறலாம்.
ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாள் மட்டுமன்றி எல்லா நாளுமே நன்றி நவிலும் நாளாக நாம் கொண்டாடுவோம்…