தித்திக்கும் என் 25 வருஷ சக்கரை பொங்கல் !

அன்புள்ள ஷ்ரியா ,
உன்னோடு இருக்கும் போது
நான் உலகத்தை திரும்பி பார்க்க விரும்புவதில்லை !
என் நெஞ்சில் முகம் புதைக்கும் போது
உன் கண்கள் மூடி நீயும் அதையே உணர்த்துகிறாய் .
உன் வயது ஏற ஏற என் வயது குறைகிறது
என் புடவை தலைப்பில் நீ ஒளிந்த காலம் மாறி உன் துப்பட்டாவில் நான் முகம் புதைக்கிறேன் .
உனக்கு பால் சாதம் ஊட்டியது போய் இன்று நீ எனக்கு பாஸ்தா ஊட்டுகிறாய் !
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்று பாரதியின் பாட்டு உனக்காக அன்று நான் பாடினேன்
என் கண்ணில் பிறரால் நீர் வழிந்தால் உன் கண்ணில் கனல் பறக்கிறது இன்று !
25 வருஷம் உன் தலை கோதி , உச்சி முகர்ந்து ( அந்த மணம் ஒரு கிறக்கத்தை தரும் ) என் கண்ணின் கருமணியாய் உன்னை வளர்த்து, இன்று பெருமையாய், உன் சேயாய் மாறியுள்ளேன்.

நீ எல்லா வளமும் குணமும் நலமும் பெற்று
ஆசைகள் நிறைவேறி, இன்று போல் என்றும் தெளிவாக தைரியமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
இப்படிக்கு ,

உனக்கு அம்மாவாக படைக்கப் பட்டதில் கர்வம் கொள்ளும் தாய் !
தித்திக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
💕💕💕💕🥰🥰🥰😘😘😘😘

1 responses to “தித்திக்கும் என் 25 வருஷ சக்கரை பொங்கல் !

  1. அன்பு சிரியாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மிக்க அன்புடன் கட்டுரை வாசித்தேன் மிகவும் அழகாக இருக்கிறது அவள் படிப்பு முடிந்து ஒரு உத்தியோகத்தில் இருக்கிறாரா தெரிந்துகொள்ள ஆவல் எல்லோருக்கும் ஆசீர்வாதங்கள் அன்புடன்

    Like

பின்னூட்டமொன்றை இடுக