Monthly Archives: ஒக்ரோபர் 2012

நான் பெறாத தலைச்சன் பிள்ளை ………….

நான் பெறாத தலைச்சன் பிள்ளை நீ…..

உனக்கு பின்னல் இரண்டு பிள்ளைகள் பிறந்து வளர்ந்து விட்டாலும், உனக்கு பிடித்த சவலை இன்று வரை போகவில்லை…..
செல்லமாக கடிந்து சொன்னாலும், ஒரு சில சந்தர்பங்களில் மிரட்டி சொன்னாலும் ஏற்க மறுக்கும் பிடிவாதக்காரன் நீ…..
சுயபச்சாதாபத்தில் பல நேரங்களில் மூழ்கிவிடுகிறாய்……….
உன் சண்டித் தனம் உன்னை விட்டு போகவில்லை………
நினைத்துக்கு கொண்டு விட்டால் பிடிவாதம் பிடிக்கிறாய்………
மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு என் கவனத்தை ஈர்ப்பது  உன்னால்  மட்டும் தான் முடியும்…….( நானும் ஈர்க்கப்பட்டு பழகி விட்டேன்)
யார் மீதோ உனக்கு இருக்கும் கடுப்பை என் மேல் திணிப்பதில் நீ மிகவும் தேர்ச்சி பெற்றவன்…….
திடீரென்று ‘மூட்’ போய்விடுகிறது…. ( காரணம் தெரிந்தாலும் பகிர்ந்து கொள்ள இசையமாட்டேன் என்கிறாய் )
தொப்புள் கோடி சம்பந்தத்தில் உண்டான பிள்ளைகள் கூட உன்னை கையாள கற்றுகொண்டுவிட்டார்கள் ……………
உன் ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படி, நீ உதிர்க்க போகும் அடுத்த வார்த்தையை  கூட என்னால் யூகிக்க முடியும்….
இது பல வருட பரிச்சயத்தால் வந்த தெளிவல்ல, உன்னை ஆழ் மனதிலிரிந்து நேசிப்பதால் வந்த தேர்ச்சி ……..
எந்த ஒரு மனிதனும் முற்றிலும் சரியானவன் அல்ல….
மேல் சொன்ன புகார்கள் வெறும் புகார்கள் மட்டுமே…… பழிப்புகள் அல்ல……..
இவை எல்லாவற்றையும் தாண்டி/தவிர்த்து நீ என் மனதில் பெரிய  பீடம் அமைத்து அமர்ந்திருக்கிறாய்…….
விஸ்வரூபம் எடுத்து நிற்கிறாய் ………….

என் கண்ணின் கருமணி !!!!!!!!!

என் கண்ணின் கருமணி,

என் இதயத்தின் துடிப்பு,
என் உயிர் நாடி,
எனக்கு பதவி உயர்வு அளித்தவள்,
வாழ்க்கையின் எதார்த்தத்தை கற்று தந்தவள்,
வாழ்கையை செம்மை படுத்தியவள்,
நான் உதிர்த்த, உதிர்க்கும் கண்ணீரை தன் பிஞ்சு விரல்களால் அன்றும், கனிவான இதயத்தால் இன்றும், தேற்றுபவள்,
என்னை தன் குழந்தையாக ஒரு நிமிடமும், தாயாக மறு நிமிடமும் பார்க்கும் திறன் உள்ளவள்,
என்னை முற்றிலும் அறிந்தவள், என் பலங்களையும் பலவீனங்களையும், அறிந்து, ஆராய்ந்து விஷயங்களை பகிர்பவள்,
என் செவிலித்தாயாக ஆறு மாத காலம் என்னை பாதுகாத்தவள்,
எனக்கு வலி தெரியாமல் இருக்க என் நெற்றி வருடி என்னை தூங்க வைத்தவள்,
என் கை பக்குவத்தின் முதல் விசிறி !!!
என்னை போலவே சிந்திப்பவள், ( ஆனால் என்னை விட தெளிவாக சிந்திப்பவள்),
என் ஆசிரியை, என் தோழி, என் நலன் விரும்பி, என் விசிறி,
என் எல்லாம் …….
என் மகள்,
நான் வணங்கும் என் செஞ்சுலட்சுமி தாயாரின் பிரதிநிதி…..