Monthly Archives: திசெம்பர் 2013

இணைப்பு

மலையும் எலியும்

மலையும் எலியும்

downloadஒரு நாள் ஒரு பெரிய மலைக்கும் ஒரு சுண்டெலிக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது

மலை கூறியது, சீ நீ எவ்வளவு சிறிய உருவம் படைத்தவன். என்று.

அதற்க்கு சுண்டெலி உடனே,

எனக்கு தெரியும், நான் உன்னை போல பெரிய உருவம் கொண்டவன் இல்லை என்று…. ஆனால், நீ என்னை போல் இல்லை….

பெரிதாக இருப்பதனால், எவ்வளவு நன்மைகள் என்று உனக்கு எங்கு தெரிய போகிறது என்றதாம் மலை.
என்னைத் தாண்டிச் செல்லும் காற்றினையும் மேகங்களையும் கூட என்னால் தடுத்து நிறுத்த முடியும் என்று மார் தட்டியதாம்.

ஆமாம் ஆமாம் கண்டிப்பாக, என்று ஒத்துக்கொண்டு விட்டு, சுண்டெலி கூறியதாம்,

உன் அடிவாராத்தில், பெரிய பெரிய பொந்துகளை சுரண்டுவதிலிரிந்து ஆனால் நீ என்னை தடுக்கு முடியாது ….என்று கூறி மலையின் அகம்பாவதிர்க்கு வைத்ததாம் ஒரு முற்றுப்புள்ளி…

மேலே உள்ள கதையை கூறி என் இளைய மகள் ஜூனியர் கே ஜி யில் இருக்கும் போது முதல் பரிசு வாங்கினாள் ….
அவர்கள் சிறுவர்களாக இருக்கும் பொது vikas story books என்று வேறு வேறு வண்ணங்களில் வரும்… இன்னமும் இருக்கிறது… குழந்தைகள் படிக்கிறார்களா என்று தான் தெரியவில்லை….
அதிலிருந்து, அத்தனை கதைகளும் படித்திருக்கிறார்கள். அதை தவிர, அவர்களின் தாத்தா தினமும் கதை சொல்லித்தான் தூங்க வைப்பார்….அவரின் கதை சொல்லும் திறனே திறன். ஒரே மாதிரி வார்த்தைகள், ஒரே கோர்வை, ….. அது ஒரு கலை … எனக்கு கூட அவர் சொல்லும் குட்டிக் குரங்கு கதை ரொம்ப பிடிக்கும்.

அன்று படித்தது, உள் வாங்கியாது, இன்றும் அவர்களுக்கு உதவுகிறது…. அவர்களை, அவர்களின், உருவ அமைப்பை யாரேனும் குறை கூறினால், இந்த மாதிரி கதை ஞாபகம் வந்து, நல்ல பதில் அடி கொடுக்கிறார்கள்.

மிகச் சமீபமாக நேற்று ஒரு மனிதர், நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்…..பெரியவர்கள், அவர்கள் வயதிற்கு ஏற்ப பேசவில்லை என்றால் இது தான் கதி …..

அந்நாளில் அவர்கள் பார்த்த cartoon கூட, நல்ல விஷயங்களை கற்றுத் தந்தன…. பிங்கு என்ற penguin …. வார்த்தைகளே பேசாது… எல்லாம் செய்கை தான்… ஆனால் எவ்வளவு நன்றாக இருக்கும்… இந்நாளில் உள்ள zoozoo போல….எனக்கு பிங்கு ரொம்ப பிடிக்கும்,… எப்போதாவது போட்டு பாக்க, தனியாக ஒரு சி .டி …வைத்துக்கொண்டிருக்கிறேன்.

என்னைப் போலவே, எனது, தோழி, ரஞ்சனி நாராயணனும் பிங்கு பிடிக்கும் என்று எழுதியிருந்தார்.
நல்ல விஷயங்கள் என்றும் மாறாது……

படம்

அந்த 21 நாட்கள்!!!!!!!

என்ன ஒரு அழிச்சாட்டியம்…..

என்னை நானே திட்டிக் கொண்டேன்……

எழுத பிடித்திருக்கிறது, நான் எழுதுவதும் மற்றவர்களுக்கு பிடித்திருக்கிறது, இருந்தும் எழுதுவதில்லை….
இது அழிச்சாட்டியம் தானே. ?

ஓயாமல் என்னை உற்சாகப் படுத்தும் ஒரே ஜீவன் ரஞ்சனி நாராயணன்.!!!!

” எழுதுங்கள் அனு ”

என்று ஒவ்வொரு முறையும் நான் தொலை பேசியில் பேசும் போதெல்லாம் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

நேற்று கூட, வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டு,
‘ அதிகம் முடியாவிட்டாலும் வாரத்துக்கு ஒரு போஸ்ட் என்று ஆரம்பித்து தொடர்ந்து எழுதுங்கள் ‘ என்றார்.

ஒரு நல்ல ஆசிரியை உந்துதல் இல்லாத மாணவிக்கு உதவுவது போல, என்னை ஊக்குவிதிதார்…

இதற்க்கு மேலும் செய்யாதிருந்தால், மஹா மட்டம் என்று தோன்றியது.

அதன் விளைவு, இப்பொழுது நீங்கள் படித்துக்கொண்டிருப்பது!!!!!!

அது சரி, ஆனால், நேற்று முழுவதும், ஆராய்ந்து கொண்டிருந்தேன், ஏன் இந்த, இடைவெளி?
ஏன் இந்த உற்சாகம் இல்லாமை?
ஏன் இந்த, discipline இல்லை ?

அதை சொல்லுங்கள், discipline இல்லை …………..
எதை எடுத்தாலும், தொடர்ந்து செய்வதில்லை.
ஏன் இப்படி ஆகிறது…..

consistent ஆகா செய்ய மாட்டேன்கிறாய்……
என்னவரின் புகார் என் மேல்….

ஒரு வாரமாக, எனக்கு நானே போட்டுக்கொண்ட timetable படி, ஒரு விஷயம் நடந்துக் கொண்டிருப்பது நினைவிற்கு வந்தது,

அட,!!!! பரவாயில்லையே, அனுராதா !!! ஒரு வாரம் தாண்டி விட்டதே, …. இன்னும் இரண்டு வாரங்கள் தான் டி செல்லம் என்று என்னை நானே முதுகில் ……….மன்னிக்க தோளில் தட்அதாங்க டிக்கொடுதுக்கொண்டேன்.

அதென்ன இன்னும் இரண்டு வாரம்…. ஆகா மொத்தம் மூன்று வாரம்…

அதாங்க the 21 day challenge

Maltz என்பவற்றின் ஆராய்ச்சியின் படி,நமது மூளைக்கு ஒரு விஷயம் பழக்கமாக பதிவாக 21 நாட்கள் தொடர்ந்து செய்வது அவசியமாகிறது. இன்னும் சொல்லப் போனால், 21 நாட்களுக்கு பின்பு அந்த பழக்கத்தை விடுவது கஷ்டமாம்.

21 நாட்கள், தொடர்ந்து செய்ய வேண்டும், ஒரு நாள் கூட நடுவில் விடக்கூடாது.

அது எந்த வேலையாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
எந்த, பழக்கத்தை, நீங்கள், விடாமல் உங்கள், நடை முறை வாழ்க்கையின் ஒரு பகுதியாக, ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அந்த விஷயமாக கூட இருக்கலாம்.
http://www.pluginid.com/21-day-challenge/

அதற்காக, 21 நாட்கள் தொடர்ந்து எழுதி, உங்களை கொல்லப் போகிறேன் என்று பயந்து விடாதீர்கள். ….

வேறு எந்த பழக்கத்தையாவது கடை பிடிக்கவோ, விட்டு விடவோ, பிரயத்தனப் பட்டுக்கொண்டு இருந்தீர்களானால், இந்த வழியில் செய்யலாம் என்று சொல்ல வந்தேன்.

நன்றி, நண்பர்களே, மீண்டும் அடுத்த வியாழன் ஒரு போஸ்டுடன் உங்களை சந்திக்கிறேன்.

ஒரு வேளை உற்சாக மிகுதியில், இடையில் எழுதினால், உங்களின், அருமையான, விலை மதிப்பில்லாத கருத்துக்களை கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்க