Monthly Archives: மார்ச் 2013

காரடையான் நோன்பு

உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன் ஒரு காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாமல் இருக்க வேண்டும் …. என ஒவ்வொரு பெண்ணும் நோன்பு நூற்று கொண்டிருப்பாள்..

நல்ல கணவன் வாய்க வேண்டும் என்று கன்னி பெண்களும்,
கிடைத்த கணவன் நன்றாகவும், இந்த அன்பான உறவு, எல்லா ஜென்மத்திலும் வாய்க்க வேண்டும் என்று மணமான பெண்களும் வேண்டியிருபார்கள்.

சில எடக்கு ஜென்மங்கள்,
” ஐயோ இதே மனுஷனா வேண்டாம்ன்டா சாமி ” என்று சொல்பர்வர்களும் உண்டு.

ஏதோ ஒன்று, கிடைக்கப் போகும் உறவை பற்றி நல்ல விதமாக நினைக்க வேண்டும்.

கிடைத்த உறவை, உயிரினும் மேலாக போற்ற வேண்டும்.

அது ஒன்றும் சுலபமான விஷயம் அல்ல என்பது எனக்கும் தெரியும்.

இருந்தாலும் முயன்று பார்க்கலாமே

எந்த உறவு தான் சுலபமானது?

எல்லா உறவுகளிலும் உரசல்கள் இருக்கும்… அந்த உரசல்களை ரணமாக்கி புரயோடிபோகும் வரை கொண்டு செல்வதா

அல்லது

மெலிதாக மயிலிறகால் வருடிக்கொடுத்து ஆற்றுவதா என்பது நம் கையில் உள்ளது.

இதே கணவன் வேண்டும் என பிரார்த்தனை செய்வதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

எப்பிடி இருக்கிறீர்கள் என்று கேட்டால் சிலர் சொல்வார்கள்….

“ஏதோ பத்துக்கு அஞ்சு பழுதில்லாமல் போய்க் கொண்டிருகிறது “என்று…

அது போல, பெரிதாக எந்த பிரச்சனையும் இல்லாத வரை, சரிதான்.

அதற்காக, உடலாலும், மனதாலும் துன்புறுத்தும் கணவனை கட்டிக் கொண்டு அழச் சொல்லவில்லை.

கல் ஆனாலும் கணவன்….. இதெல்லாம் வேறு கதை.

முயன்று பார்த்து முடியவில்லை என்றால், அந்த உறவை எட்டி உதைத்துவிட்டு வரவும் நாம் தயாராக இருக்க வேண்டும்

அதற்க்கு முதலில், நல்ல கல்வி வேண்டும்,

மனதில் உறுதியும் தைரியமும் வேண்டும்….

தன்னம்பிக்கை வேண்டும்

உலக பெண்கள் தின வாழ்த்துக்கள்…..

உலக பெண்கள் தினம்……

ஒரு சிறு இடைவெளிக்கு பின்பு, மீண்டும் எழுத வேண்டும் போல் இருந்த போது, என் இந்த நன்னாளில் எழுத கூடாது என்று தோன்றியது.
மகள், சகோதரி, மனைவி, அம்மா, என பல வேடங்கள் …
எல்லாவற்றையும் செவ்வனே செய்யத்தக்க நேர்த்தி,
எல்லோர் மனதையும் கொள்ளை கொள்ள கூடிய பரிவு,
நேற்றைய குழந்தை மனப் பெண்ணாகimages இருந்த போதும், இன்றைய நவ நாகரீக நங்கையாக இருக்கும் போதும், தன பொறுப்புணர்ந்து, செயல் படுபவள்,
இல்லறத்தையும் பணி  புரியும் இடத்தையும், மிக அழகாக சமாளிப்பவள்,
தசாவதானி ….
அதற்க்கும் மேலும் கூட செய்ய கூடியவள்
ஒரே சமயத்தில் இளகின மனமுடயவளாகவும், எந்த சந்தர்ப்பத்தையும் தைர்யமாக எதிர் கொள்ள கூடியவளுமாக இருப்பவள்.
தன அன்பால் எல்லோரையும் கட்டிப்போடக் கூடியவள்.
 
நம் ஒவ்வொருவரையும் இந்த உலகுக்கு கொண்டு வந்த நம் தாய்க்கு நன்றி சொல்லி, 
தாய்மையை போற்றுவோம்,
நம் சகோதரிகளையும், மனைவியையும், மருமகளையும், மகளையும் நேசிப்போம்……