Category Archives: தவிப்பு

சோதனை

என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நிற்கிறது. தொண்டை குழியில் ஒரு அடைப்பு…

இயலாமை, கோபம், வருத்தம், நம்பிக்கை, பரிதவிப்பு, ஏமாற்றம், கருணை, எல்லாம் ஒரு சேர ஒரே சமயத்தில் என் மனதை ஆட்க்கொண்டு உலுக்கி எடுக்கிறது.

ஆனால் என் வயதின் காரணமோ, அல்லது நம்பிக்கையின் காரணமோ, அல்லது பக்குவத்தின் காரணமோ …. என்னை ஒரு புறம் சமாதான படுத்தவும் செய்கிறது.

சின்ன துன்பம் வந்தாலே துவண்டு விடுபவர்களின் மத்தியில் என் தோழி ஒரு பெரிய போராட்டத்தை ஐந்து வருடங்களாக போராடி வருகிறாள்.

முதல் முதலாக புற்று நோய் கண்டறிய பட்ட போது என் தோள்களில் சாய்ந்து அழுத அவளை
இதுவும் கடந்து போகும் என்று தேற்றினேனே..

புற்று நோய்க்கு சவால் விடுத்து தன் நம்பிக்கையை மட்டுமே முதலீடாக போட்டு நடக்கும் போராட்டம்.

தன் மகனுக்கு வேண்டியாவது தான் வாழ வேண்டும் என்று தனக்கு தானே உர்ச்சாகமளிதுக்கொண்டு வாழ்கிறாள்…
ஒரு மாதமாக கண் பார்வை இல்லை… உபயம்: நோயின் வீரியம்…

வாழ ஆசை.
உண்ண ஆசை
உடுக்க ஆசை
அலங்கரித்துக்கொள்ள ஆசை
நண்பர்களுடன் நேரம் செலவிட ஆசை.
பண்டிகைகளை விடாமல் அழகாக செய்ய ஆசை..

அதனால் தான் அந்நோய்க்கு உன்னிடம் இதனை ஆசையோ ?

சீக்கிரம் உன் பார்வை நேராகி, உன் உடல் நிலை தேறி
நீ இப்போது இருக்கும் கொடிய வேலிக்குள்ளிருந்து மீண்டு வர நான் ஓயாமல் அந்த கடவுளை பிரார்த்திக்கிறேன்…

உனக்கு பிடித்த தாளிச்சு கொட்டிய தயிர் சாதம் என் கையால் தயார் செய்து கொடுக்கிறேன்…
சீக்கிரம் வா………………..
என் இதயம் கனக்கிறது பெண்ணே..

என் பிரார்த்தனைகள் வீண் போகாது …..அவள் பிரார்த்தனைகளும் தான்….