Monthly Archives: மார்ச் 2016

என் பாட்டி

image

காலையில் எழுந்தது முதல் கை தொலை பேசியில் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருந்தன.

விதியாசமாக வந்த செய்தி… என் பாட்டியை பற்றி தெலுங்கு செய்தித்தாளில் வந்த செய்தி மற்றும் புகைப்படம்.
image

102 வயது இந்த வருடம்  பூர்த்தியாக போகும் குமரி !

image

கடமை, காருண்யம், கனிவு இது மட்டுமே அவளுக்கு தெரியும்.
வீட்டிற்கு வருபவர்களுக்கு முதலில் காப்பியை குடுத்துவிட்டு தான் மறு வேலை.

தொலைநோக்கு பார்வை….
நாகரீகம் என்பது உடையில் இல்லை , உள்ளத்திலும் சிந்தனையிலும் உள்ளது என்பதற்கு அவள் ஒரு நல்ல உதாரணம்.

ஐந்து பிள்ளைகளை பெற்று அதில் இரண்டை பலி கொடுத்து,
இதுவும் கடந்து போகும் …..
என்று வாழ்கையை நடத்திக்கொண்டிருப்பவள்.

கொள்ளு பேத்திகளாகிய என் மகள்களுக்கு அவ்வபோது டிப்ஸ் தருபவள். !!!!

image

image

படிக்கவா கல்யாணம் பண்ணிக்கவா என்றும் கேட்க்கும் என் மூத்த மகளிடம் ……முகத்தை சுளித்து கல்யாணம் அப்பறம் ஆகட்டும்… மேல படி ….. நன்னா படி என்று சொல்லும்போது, என்ன ஒரு தெளிவான சிந்தனை என்று நான் வியக்காத நிமிடம் இல்லை.

அனாவச்ய மன உளைச்சல்கள் இல்லை.
இப்போது நினைவு அதிகம் இருப்பதில்லை….( பார்க்க பொறாமையாக இருக்கிறது…)
வருவோரை பொக்கை  பல்லை கட்டி சிரித்து வரவேற்க வேண்டும்…
காபி குடிக்க சொல்ல வேண்டும்
அவர்கள் விடை பெரும் பொது காலில் விழுவார்கள் , நன்றாக வாய் நிறைய வாழ்த்த வேண்டும்
மீண்டும்பொக்கை  வாய் சிரிப்பு…
டாட்டா  காண்பிக்க வேண்டும்…..

அடேயப்பா என்ன ஒரு வாழ்க்கை.

image

புகைப்படம் எடுத்த கையோடு அதை வாங்கி பார்ப்பது !!

அவள் கடந்து வந்த பாதை கரடு முரடானது என்றாலும்….
நாம் கற்றுக்கொள நிறைய பாடம்….

எதையும் அமைதியாக அணுக வேண்டும்
இது(சுகமோ துக்கமோ ) நிரந்தரம் இல்லை எதுவும் நிரந்தரம் இல்லை
அடுத்த தலைமுறையை / அடுத்தவர்களை அவர்கள் கண்ணோட்டத்தில் பார்க்க விடுவது
விருந்தோம்பல்
மனமார வாழ்த்துவது
தன்னை எப்போதும் பளிச்சென்று வைத்துக்கொள்வது
( கழுத்தில் இரண்டு சங்கலிகள் கைகளில் வளையல்கள், மோதிரங்கள் )…
மனமும் அமைதியாக இருந்து சிறிது ஒப்பனையும் செய்து கொண்டால் நமக்கே நம்மை பிடிக்கும்

அவள் வாழும் ஒவ்வொரு தினமும் எங்கள் குடும்பத்தார்க்கு ஒரு போனஸ் ……
வாழ்த்த வயதில்லை எனக்கு ஆனால் என் பாட்டி  என்று மார் தட்டிக்கொள்ள  தவறுவதில்லை….

அவளை போலவே வாழ பழக்க படித்திக்கொண்டு விட்டேன்….
அவளை போலவே நெடுநாள் வாழ்வேனா என்பது தெரியாது… வாழ்ந்தாலும் அதுவும் அவளை போல தான் இருக்கும் என்பது மட்டும் தெரியும்…..

image

பாட்டியின் கால்களை பின் தொடர ஆசை….

image

நான் குழந்தையாக இருந்த போது…..அவள் கைகளில்…