Monthly Archives: பிப்ரவரி 2018

அமெரிக்காவில் அனு…..

காலம் படு வேகமாக சுழன்று, மையிலையில் பிறந்த என்னை, இன்று ஒக்லஹோமாவில் (அமெரிக்காவில்) கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. மகள் இருக்கும் இடத்தில் அவளுடன் இருக்க வந்திருக்கும் இந்நாளில், எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து எல்லோருக்கும் எல்லா க்ஷேமங்களும் கிட்ட பிரர்த்திக்கிறேன்.

பாலைவனமாக காட்சி தரும் இடத்தில் இருந்து பழக்கம் இல்லையே அதனால் வந்த 2 தினங்கள் 2 யுகங்களாக நழுவின.

அந்தி சாயும் பொழுது,

முகத்தில் அடிக்கும் குளிர்ந்த காற்று,

கடந்து செல்லும் கார்கள்,

அமெரிக்காவின் வெறிச்சோடிய தெருக்கள்,

10 -11வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு குடிபெயர்ந்த போது இருந்த உற்சாகம் ஏனோ இப்போது இல்லை. வயதா? இல்லை காலமா?

ஓராயிரம் எண்ணங்கள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதுகின்றன. எங்கிருந்து தொடங்கி எதை திருத்துவது என்று விளங்கவில்லை.

அதிகம் மௌனமாக இருக்கிறேன்

என் மௌனம் கணவரையும் குழந்தைகளையும், சிந்திக்க வைக்கிறது. எனக்கும் புரிகிறது.பல கேள்விகளுக்கு விடை இன்று இல்லை என்னிடம். ஆனால் கடவுள் அருளால் காலம்நல்ல தீர்ப்பையே தரும் என்று காத்திருக்கிறேன்.

Change ia the only constant change என்பார்களே, இந்த மாற்றம் புதிது. 10 நாட்கள் ஆன நிலையில், இன்று அதிக சிரமமாக இல்லை. சமைப்பதும், தொப்பி பின்னுவதுமாக நேரம் போகிறது. இறை அருளால், என்னை நான் மும்மரமாக எதிலாவது ஈடுபடுத்திக்கொள்ள தெரிவதால் எங்கு போனாலும் இருந்து விடலாம் என்கிற தெம்பு….இதை படிக்கும் என் வாசகர்களும் என்னுடன் இருப்பது பெரிய தெம்பு.நன்றிஇங்கிருக்கும் இந்த மாதங்களில், இந்தியாவில் இருப்பது போல் அரக்க பறக்க வேலைகள் இல்லாததால் எழுதுவது கூட கூடலாம்.