பச்சை மிளகாய் கற்றுத்தந்த பாடம்……

தோழி, அக்கா , மாமி, ஆண்ட்டி …எப்பிடி கூப்பிடுவது அவர்களை?

பெயர் கீதா
புதிதாக எங்கள் அபார்ட்மென்டில் குடித்தினம் வந்திருக்கிறார்கள்.
தமிழ் பேசுவதால், ஒரு அலாதி அன்யோன்யம் ஏற்ப்பட்டு, நெருக்கமாக பழக ஆரம்பித்திருக்கிறோம்….
என்னை விட 13 வயது பெரியவர்கள்..பெரிய மகளுக்கு திருமணம் முடித்துவிட்டார்…
வெள்ளந்தியான மனசு, எல்லோரையும் வாய் நிறைய பாராட்டும் குணம், மற்றவர்களிடம் இருக்கும் திறமையை, வியந்து வியந்து பேசுகிறார்….
என்னையும் தான்…!!! [ அதானே பார்த்தேன், இல்லேனா நீ ஏன் அவரை பற்றி எழுத போகிறாய் என்று கேட்பவர்கள் கேட்கட்டும் ] ……
ஏதோ, சத் விஷயங்களும், சத்தான உணவையும் பரிமாறிக் கொண்டிருக்கிறோம் இந்த இரு வாரங்களாக.
நான் போட்டுக் கொடுத்த டப்பாவில், தான் நேற்று தயிர் வடை செய்து எடுத்து வந்திருந்தார் அவர்.
அருமையாக இருந்தது, மிதமான காரம், புளிப்பில்லாத தயிர், நல்ல அலங்காரம்….எல்லாம்…..
ஒன்று தின்றுவிட்டு, அடுத்ததை குற்ற உணர்வுடன் தட்டில் வைத்து, பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு,
” போனால் போகட்டும் இதெல்லாம் என்ன தினமுமா தின்ன கிடைக்கிறது ” என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு [????] அடுத்ததையும் வெட்டினேன்…
நடுவிலேயே, வாயில் ஒரு அரைபடாத பச்சை மிளகாய் துண்டு….. சரி தயிர் வடை தான் சாதுவாக இருக்கிறதே என்று, பச்சை மிளகாய் கடித்தது கடித்ததாகவே இருக்கட்டும் என்று மேலும் கடித்தேன் [ திமிரு தான் வேற என்ன ]?
விக்கி திக்கி, தண்ணீர் குடித்து ஒரு வழி ஆனேன்….
ஆனால், யோசித்து பார்த்தல், பச்சை மிளகாய் நல்ல பாடம் சொல்லிக்கொடுத்தது ……
சுவையான உணவின் நடுவில் நாவில் அகப்படும் பச்சை மிளகாய் போல தான் வாழ்க்கையில் சில சம்பவங்கள் இல்லையா…..?
எதிர்பாராத சமயத்தில், நம்மை கதி கலங்கக்செய்யும் நிகழ்வுகள்…..
அப்பிடி, கதி கலங்க செய்து, அதை எதிர்க்கொண்டு, மீண்டு எழுந்து, தன்னை சுதாரித்துக்கொண்டு, தன்னையும், தன்னை சுற்றி உள்ளவர்களையும் எதார்த்தமாக வாழச் செய்து,
உள்ளே அழுது, வெளியே சிரித்து …..இந்த ஜென்மத்திலேயே, இரண்டாம் முறை பிறந்து வாழ்ந்துக்கொண்டிருப்பவர்கள் நினைவுக்கு வந்தார்கள்…..
தோழி ஒருத்தி, தன தகப்பனாரின் எண்பதாவது வயது [ சதாபிஷேக ] வைபவத்திற்காக தயாராகிக்கொண்டிருந்த சமயம்,
தன பிள்ளையின் பள்ளியில் மீட்டிங் என்பதால், தன் கணவர் போவதாக சொன்னதால், தான் வேலைக்கு சென்றாள் ….
வீட்டிலிருந்து கிளம்பின கணவன், பொட்டலமாக திரும்பி வந்தான்…..
விபத்தில் விழுந்து விட்டான் என்று தெரிந்த நேரத்திலிரிந்து, அவன் பெற்றோருடனும், அவளுடனும், இருந்து
‘ ஏன் ஏன் இப்பிடி ஆகா வேண்டும் ” என்று யோசித்து யோசித்து, பதில் புரியாமல் போக…. அவர்களுக்கு, பலமாக இருப்பது மட்டுமே இப்போது நான் செய்ய வேண்டியது என்று தோன்றிற்று ….செய்தேன்….
பிள்ளைகள் இருவரும் சின்னன் சிறியவர்கள்….. மூத்தவள் ஆறிலும், மகன் இரண்டிலும்…..
ஆனால் எதுவும் நிற்கவில்லை…..காலம் ஓடிக்கொண்டிருக்கிறது….பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள்…
அவளை பார்க்கும் போதெல்லாம் எட்டிப்பார்க்கும் மேலே சொன்ன கேள்வி…..ஆனால் அவளுக்கு தேவை என் அனுதாபம் இல்லை….. என் சப்போர்ட் தான்…
ஏதோ இன்று வரை கொடுத்துக்கொண்டிருக்கிறேன் அதை……..
இன்னொரு தோழி, தனக்கு எது வரக்கூடாது என்று அடிக்கடி சொல்வாளோ அதால் பாதிக்க பட்டு…. அழுது, புலம்பி, பிரார்த்தனை செய்து, இப்போது, நல்ல படியாக இருக்கிறாள்….
புற்று நோய் இன்று எல்லோர்க்கும் வருகிறது. எவ்வளவோ, விழிப்புணர்வு இருந்தாலும், நமக்கு நெருக்கமானவர்களுக்கு வந்தால், முகத்தில் அறைந்தார் போல் இருக்கிறது….
அப்படிதான் இருந்தது எனக்கும்….
என்ன சொல்லி தேற்றுவது அவளை???….புரியாமல் விழித்தேன்.
ஆனாலும், அவளை தேற்றுவதற்காக நான் தைரியமாக தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, அவளை பார்த்து, கட்டிக்கொண்டு, [ கட்டி பிடி வைத்தியம் தான் வேறென்ன ???]
‘ஆச்சு முடிஞ்சு போச்சு, இனி புது பிறவி, நல்லதையே நினை…ஏதோ இப்போதே தெரிந்ததே, என்று சந்தோஷப்படு ” …. என்று கூறி தேற்றி …
நன்றாக உள்ளதாக, பழயபடி நீ வளைய வருவதாக நினதுக்கொள் ….விடாது, சிந்தனை செய் என்று கூறி….. கிரேயடிவ் விசுவலைசேஷன் பற்றி நிறைய பேசி, தைரியம் ஊட்டினேன் ….
கொஞ்சம் கொஞ்சமாக, தேறி, நடு நடுவே தளர்ந்து, பின் நிமிர்ந்து, திரும்பவம் சறுக்கி, திரும்ப எழுந்து….. இப்போது தன்னை தானே தூக்கி நிறுதிக்கொண்டிருக்கிறாள் …..
வைத்தியம் முடிந்து, பாப் தலையுடன் என்னை பார்க்க வந்த போது …மகிழ்ச்சியாக இருந்தது……..
அனால் இதில் வித்யாசப் பட்டவர்களும் உண்டு…..
காக்கைக்கு தன குஞ்சு பொன் குஞ்சு என்பது பழமொழிக்காக மட்டுமோ என்ற தோன்றும் அவளை பார்க்கும் பொது…..
ஆட்டிசம் என்னும் குறை பாடுடன் பிறந்த தன மகனை வெளி உலகத்திற்கு அறிமுகபடுத்தக் கூட வெட்க்கப்படுபவள் ….
எப்பிடி முடிகிறது…. நாமே நம் குழந்தையை இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால்….உலகம் எப்படி பார்க்கும்….ஏன் சிந்திக்கவில்லை அவள்…
தன்னை பற்றி அவனே சரியாக உணராததால், அவன் செய்கைகள் அசாதாரணமாக தான் இருக்கும்…. [தெரிந்திருந்தால் செய்வானா???]
அவனை உடலாலும் துன்புறுத்தி …தானும் தன்னை வேதனையில் ஆழ்திக்கொள்கிறாள் ………..
நாம் இறைவனால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் …அதனால் தான் என்னை இந்த குழந்தைகளுக்கு தாயாக நியமித்திருக்கிறான் என்று ஏன் தோன்றவில்லை…
அவன் மட்டும் ‘ஸ்பெஷல் குழந்தை ‘ இல்லை ..இவளும் தான் ‘ஸ்பெஷல் தாய் ‘
தன்னால் முடிந்ததை அவனுக்கு புகட்டி… நல்லதே நினைத்தால் நல்லது நடக்கும் என்று ஏன் தோன்றவில்லை…..
என் கேள்விகளுக்கு பதில் கிடைப்பது கடினம்…….அவளுக்குள் நெகடிவிடி ஊறிவிட்டது……மாற்றிக்கொள்ளவும் தயாரில்லை…..
யாருக்குதான் பிரச்சனைகள் இல்லை… சின்னதும் பெரிசுமாக எவ்வளோ இருக்கின்றன…
எதற்கும் வாடாமல், தைரியமாக வாழ்க்கையை எதிகொள்வதில் இருக்கிறது சாமர்த்தியம்…
நான் எதையும் புதிதாக சொல்லவில்லை… சொன்னவர்களின் வார்த்தைகள் பசுமரத்து ஆணிபோல் பதிந்ததால், அதை நடை முறை படுத்துவதற்கு முற்படுகிறேன், வெற்றியும் அடைகிறேன் …..
கவிஞர் கண்ணதாசனின் வரிகளில் ………………..
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வந்தாலும்
வாடி நின்றால் ஓடுவதில்ல
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்ஒவ்வொரு வார்த்தையையும் மனதில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்…………

பச்சை மிளகாயை கடித்தால் என்ன, ஒரு குலாப் ஜாமூனோ, மைசூர் பாக்கோ கிடைக்கமலா போய்விடும் ?
இது தான் நான் வாழ்க்கையை பார்க்கும் விதம்……..

13 responses to “பச்சை மிளகாய் கற்றுத்தந்த பாடம்……

  1. Simple Post with Lovely writings! Ur writing skills in Tamil r süperb! I am glad i learnt to read and Write Tamil ( Thanks to my grannys Love for whom i picked up this language writing letters) keep Marching ahead Anu…….

    Like

  2. simple but very great always give encouraging and positive thoughts to who are in need surely they will over come

    Like

  3. anu fantastic post… u always see the positive side n keep us encouraging… Keep moving… Lovely post! u shud start writing stories too anu… It would sure be a hit…. Do give a try! thnks vidhya

    Like

  4. மிக நல்ல கருத்தை சொல்லி இருக்கீறீர்கள். எதற்கும் வாடாமல் சிலரால் தான் இருக்க முடியும்.
    சிந்திக்க வைக்கும் ஒரு பதிவைக் கொடுத்து இருக்கிறீர்கள்.
    பாராட்டுக்கள்.

    Like

  5. Anu, What can i say? We all know that you too have been ( still) a SURVIVOR. facing life on the face and taking things in stride. I guess when life doesnt offer choices, we can only go forward and find the strength to survive. 🙂

    Like

  6. இவ்வளவு மனது திடத்தைச் சொல்லக்கூட எப்படி முடிகிறது.?
    ;சிந்திக்க வைக்கிறது. அருமையாக இருக்கு.
    என் ஃபோன் நம்பர் . பம்பாய்.
    26334066; உங்கள் -போன் நம்பரைக் கொடுக்கவும்..
    என்னுடையது லேண்ட் லைன் நம்பர்.. ,யார் எடுத்தாலும்.பெயர் சொன்னால் என்னிடம் சொல்வார்கள்.அன்புடன்

    Like

  7. வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எது வந்தாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்ல
    எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
    இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்ஒவ்வொரு வார்த்தையையும் மனதில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்……

    அருமையான குலோப்ஜாமூன் கிடைத்த நிறைவு ….

    Like

பின்னூட்டமொன்றை இடுக